🛕 Arulmigu Kudaluruvi Mariamman Temple

அருள்மிகு குடலுருவி மாரியம்மன் திருக்கோயில், காட்டேரி தேவர் வீதி, சூலூர் - 641402
🔱 Kudaluruvi Mariamman

📜 About this temple

இக்கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் சுயம்புமாக எழுந்துள்ளது. இதனை அப்பகுதியிலிருந்த மலைவாழ் மக்கள், தங்களின் காவல் தெய்வமாக வழிபட்டுள்ளனர். தொடர்ந்து, காடுகள் அழிக்கப்பட்டு கிராமங்களாக உருவெடுத்த பின், கிராம மக்கள் வழிபடாமல் சற்று தயக்கத்தில் இருந்துள்ளனர். தன்தொடர்ச்சியாக, அப்பகுதியில் வந்த அம்மை நோயின் எதிரொலியாக மக்கள் இங்கு வந்து வழிபடத்துவங்கி, நல்ல பயன்பெற்ற பின், சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு அச்செய்தி சென்றடைய, கோயில் ஆலாந்துறை சுற்றுப்பகுதியில் பிரசித்தி பெற்றது. 58 ஆண்டுகளுக்கு முன், சுயம்பு வடிவத்தில் உள்ள மாரியம்மனை அகற்றிவிட்டு, ஒரு சிலை வடிவம் கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி, சுயம்பு வடிவில் உள்ள மாரியம்மனை இடம் மாற்றம் செய்தபோது, அங்கிருந்து தீக்குழப்புகள் வெடித்துள்ளன. அதன் பிறகு, அம்முயற்சியை ஊர் பொதுமக்கள் கைவிட்டு, சுயம்பு வடிவத்தை அங்கேயே வைத்துவிட்டு, கூடுதலாக சிலை வடிவம் அமைத்துள்ளனர். குடலூர் மாரியம்மன். குடலூர் மாரியம்மன் என்றால், குடலுக்குள் உயிராய் இருப்பவள் என்று பொருள். இந்த அம்மன், அனைவரின் வீட்டிற்கும் சென்று உணவருந்தியதாக வரலாறு உள்ளது. சுயம்புவாகத்தோன்றிய இந்த மாரியம்மன், நோய்களை குணப்படுத்தக்கூடியவள் என இப்பகுதி கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள அம்மன் சுயம்புவாக எழுந்தருளியவள்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).