🛕 Arulmigu Mariyamman Temple

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஒருதட்டு - 624208

📜 About this temple

லிங்கம நாயக்கன் இப்பகுதியை ஆண்டு வந்த போது, அரண்மனைக்கு பால் கொண்டு வரும் வேலைக்காரர் தினமும் பாலை கறந்து குறிப்பிட்ட இடத்தில் வைத்தவுடன் பால் குடம் காணாமல் போய்க் கொண்டே இருந்தது. மன்னனுக்கு தகவல் தெரிந்து, அந்த இடத்தைப் பார்வையிட்டான். அந்த இடத்தில் சிலை ஒன்று மண்ணில் மறைந்திருப்பது கண்டு மண்வெட்டி கொண்டு தோண்ட உத்தரவிட்டான். தோண்டும் போது அம்மன் தோளில் கடப்பாறை பட்டுவிட்டதால் ரத்தம் பீறிட்டது.அச்சிலையை எடுத்து மஞ்சள் நீராட்டி அந்த இடத்திலேயே லிங்கம நாயக்கன் பிரதிஷ்டை செய்தான்.ரத்தம் பீறிட்டு வெளிவந்த அம்மன் என்தால் அவ்வூர் காலப்போக்கில் நத்தம் என்று அழைக்கப்பட்டது. இந்த தகவல் மன்னர் லிங்கமநாயக்கரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் வீரர்களுடன் அந்த இடத்துக்கு வந்தார். அங்கே திகிலாங்கொடி என்ற தாவரத்தின் வேர்கள் பரவிக்கிடந்தன. அறியாமல் நடந்த தவறுக்கு அம்பாளிடம் மன்னிப்பு கேட்டு, அம்மனுக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் செய்தனர். அங்கேயே சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிற்காலத்தில் இங்கு கோவில் கட்டப்பட்டது.

இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் தாழ்மலரை பணிந்த பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).