Arulmigu Varadaraja Perumal Thirukoyil

Arulmigu Varadaraja Perumal Thirukoyil

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், கள்ளிமந்தையம் - 624617
🔱 Varadaraja PerumalPrivate Temple

கள்ளிமந்தையம்
Dindigul District, Tamil Nadu, India — 624617

📷 Photo Gallery

Arulmigu Varadaraja Perumal Thirukoyil photo 1Arulmigu Varadaraja Perumal Thirukoyil photo 2Arulmigu Varadaraja Perumal Thirukoyil photo 3Arulmigu Varadaraja Perumal Thirukoyil photo 4Arulmigu Varadaraja Perumal Thirukoyil photo 5Arulmigu Varadaraja Perumal Thirukoyil photo 6Arulmigu Varadaraja Perumal Thirukoyil photo 7Arulmigu Varadaraja Perumal Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 7.00 a.m. to 12.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m.
📞 Phone+91- 451-255 7232, 93629 36203
🎉 Festivalசித்திரைத் திருவிழா -5 நாள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.
🙏 Prayer Intentionபொருட்களை தொலைத்தவர்கள், பிரிந்த உறவுகள் மீண்டும் இணைய விரும்புபவர்கள் கார்த்தவீரியார்ஜூன ருக்கு எலுமிச்சை மாலை அணிவித்த
🕯️ Vow Ritualதாயாருக்கு புடவை சாத்துதல், பெருமாளுக்கு துளசி மாலை அபிசேகம் ஆகியவை நேர்த்திகடன்களாக செலுத்தப்படுகின
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் அமைந்த தலம்.

📍 Location

📍 Approximate location — Dindigul, Tamil Nadu. Help us add precise coordinates →

கள்ளிமந்தையம்
Dindigul District, Tamil Nadu, India — 624617

📜 About this temple

"மண்டூகம்' என்ற சொல்லின் பொருள் "தவளை'. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். இதனால், அவர் "மண்டூக மகரிஷி' என பெயர் பெற்றார். தன் சாப நிவர்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டி தவமிருந்தார். அப்போது, அசுரன் ஒருவன் அவரை தொந்தரவு செய்யவே, அவனிடமிருந்து தன்னைக் காக்கும்படி மதுரையில் அருளும் கள்ளழகரை வேண்டினார். அவருக்கு அருளிய சுவாமி, அசுரனை அழித்தார்.மேலும், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். "சவுந்தரராஜர்' என்றும் திருநாமம் பெற்றார். மதுரை அழகர் கோயிலுக்கு இணையான சிறப்பை பெற்ற இத் திருத்தலத்தை 500 வருடங்களுக்கு முன்பு விஜய நகர ஆட்சி வழி வந்த அட்சுத தேவராயர் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

அதிசயத்தின் அடிப்படையில்: மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் அமைந்த தலம்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

மதுரை அழகர்கோயிலுக்குண்டான நேர்த்திக்கடனை இங்கே செலுத்தலாம். கல்வி வழிபாடு: இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். திருவோணத்தன்று ஹயக்ரீவருக்குதேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது.படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுகுறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது. அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷ மானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பதுஅபூர்வம். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு. சிற்பங்களின் சிறப்பு: இதை "சிற்பக்கோயில்' என்று சொல்லு மளவுக்கு பிரமாண்டமான கலைவண்ணங்களைக் காணலாம். தாயார் கல்யாண சவுந்திரவல்லி தனி சன்னதியில் இருக்கிறார். இவளது சன்னதி முகப்பில், நின்ற நிலையில் விநாயகர், விஷ்ணு துர்க்கை மற்றும் சங்கநிதி, பதுமநிதி உள்ளனர்.இச்சன்னதி முன் மண்டபம் சிற்ப சிறப்பை வெளிப்படுத்தும் கலைக் கூடமாக வட

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: பொருட்களை தொலைத்தவர்கள், பிரிந்த உறவுகள் மீண்டும் இணைய விரும்புபவர்கள் கார்த்தவீரியார்ஜூன ருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.வியாழன் தோறும் ஆண்டாள் இம்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறாள். அப்போது திருமணத் தடையுள்ளவர்கள் இவளுக்கு மஞ்சள்பொடி அபிஷேக செய்து, மன்மதன், ரதிக்கு மணமாலை அணிவித்து வேண்டி கொள் கிறார்கள். இதனால் விரைவில் நல்ல வரன் அமையும் என நம்புகிறார்கள். வெளிநாட்டு வரன்கள் வேண்டிக்கொண்டால் கூட அதே போல் வரன் அமைந்து விடுவதாக இக்கோயில் பக்தர்கள் அதிசயித்து கூறுகின்றனர். திருமண வரம் தவிர குழந்தை பாக்கியம், கல்வி ஞானம், வியாபார விருத்தி ஆகியவைகளுக்காக இத்தலத்
🕯️ Vow / offering: தாயாருக்கு புடவை சாத்துதல், பெருமாளுக்கு துளசி மாலை அபிசேகம் ஆகியவை நேர்த்திகடன்களாக செலுத்தப்படுகின்றன.

🎉 Festivals

சித்திரைத் திருவிழா -5 நாள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். ஆடிப் பவுர்ணமி பெருந்திருவிழா- 10 நாள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 7.00 a.m. to 12.00 a.m
4.00 p.m. to 8.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in கள்ளிமந்தையம் or Dindigul headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Dindigul to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், திண்டுக்கல்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.