Arulmigu Bhadhraghaliyamma Thirukoyil

Arulmigu Bhadhraghaliyamma Thirukoyil

அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், சதுமுகை, Sathumugai - 638503
🔱 Mariyamman and SellandiammanPrivate Temple

சதுமுகை
Erode District, Tamil Nadu, India — 638503

📷 Photo Gallery

Arulmigu Bhadhraghaliyamma Thirukoyil photo 1Arulmigu Bhadhraghaliyamma Thirukoyil photo 2Arulmigu Bhadhraghaliyamma Thirukoyil photo 3

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ Opens+91 4256 261 774
📞 Phone+91 4256 261 774
🎉 Festivalபங்குனி மாதம் குண்டம் திருவிழா, சித்ராபவுர்ணமி, தீர்த்தக்குட விழா, துர்க்காஷ்டமி
🙏 Prayer Intentionதிருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல், வியாபாரம் துவங்குதல்,
🕯️ Vow Ritualராகுவின் அதிதேவதையாக காளி விளங்குவதால், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறாள். சுடர் விட்டு ப

📍 Location

📍 Approximate location — Erode, Tamil Nadu. Help us add precise coordinates →

சதுமுகை
Erode District, Tamil Nadu, India — 638503

📜 About this temple

கன்று ஈன்ற பசு ஒன்று காட்டில் மேய்ந்து விட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது. பசுவின் உரிமையாளர் ரகசியமாக சென்று பார்த்தார். அப்போது, ஒருபுற்று அருகே பசு சென்றது. புற்றிலிருந்து ஐந்து தலை நாகமொன்று வெளிப்பட்டு பசுவின் ஐந்து மடிகளிலிருந்தும் பாலைக் குடித்தது. இதைப்பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ந்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய ஒரு பெண் நான் பத்ரகாளி, நான் உன் பசுவின் பால் குடித்து மனநிறைவு பெற்றேன், என்னை இவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபடுக, என்றாள். அம்மனின் அருள்வாக்கை ஏற்று அந்த இடத்தில் பக்தர்கள் கோயில் கட்டி வழிபடத் துவங்கினர். அம்பாளுக்கு பத்ரகாளி என்ற பெயர் சூட்டப்பட்டது. பெயர் விளக்கம்: பத்ரம் என்ற சொல் இலை, அழகிய உருவம், பாதுகாப்பு என்ற பொருள்களைத் தருகிறது. பத்ரகாளி என்ற சொல்லுக்கு இலைத்தோடு அணிந்த காளி, அழகிய தோற்றமுடைய காளி, மக்களைப் பாதுகாக்கும் சக்தி என்ற பொருள்கள் உண்டு.

அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட தலை, மண்டை ஓடு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிஷனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் (செயற்கரிய செயல்களை செய்யும் போது வியந்து பாராட்டும் சிறப்பம்சம்) நாகம், மணி, கிண்ணத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறாள். பகைவர்களின் தலைகளை மாலையாக தொடுத்து அதையே மார்புக்கச்சாக கட்டியிருக்கிறாள். மகிஷனின் தலையில் கால் வைத்துள்ளதால், நவராத்திரி நாயகியான மகிஷாசுரமர்த்தினியாகவும் கருதப்படுகிறாள்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

மகிஷன் என்னும் அரக்கனைக் கொன்று மகிஷாசுரமர்த்தினி என்றும், பத்ரகாளி என்றும் பெயர் பெற்றவள் அன்னை ஆதிபராசக்தி. நவராத்திரி விழா நடப்பதே மகிஷாசுரமர்த்தினியின் பெயரால் தான். இந்த தேவி, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அருள்பாலிக்கிறாள். நவராத்திரியை ஒட்டி இவளை வணங்கி துன்பங்களுக்கு முடிவு கட்டி வரலாம். கனவில் பலன்: அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில் கணவனின் கொடுமை தாங்க முடியாத ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் இரவில் கிணற்றில் குதித்தாள். தூங்கி கொண்டிருந்த பூஜாரியின் கனவில் அம்மன் சென்று உடனடியாக இளம்பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற கூறினாள்.அதன்படி பூஜாரி, கிணற்றில் குதித்த இளம் பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றினார். இதை தொடர்ந்து கனவில் வந்து பலன்சொல்லும் அம்மனாக அந்தியூர் பத்திரகாளியம்மன் திகழ்கிறாள். இவளை நினைத்தபடியே உறங்குபவர்களுக்கு அம்பாளே கனவில் வந்து கோரிக்கைகளுக்கு பதில் சொல்வாள் என்ற நம்பிக்கையும், மேலும், குற்றம் செய்பவர்களை இவள் உடனடியாக தண்டிப்பாள் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் இருக்கிறது. குண்டம் சிறப்பு: இங்கு நடக்கும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணம், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல் வியாபாரம் துவங்குதல், கல்வி போன்ற விஷயங்களுக்கு அம்மன் சிரசில் பூ வைத்து, தொழில் துவங்கலாமா என வாக்குக் கேட்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பா

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல், வியாபாரம் துவங்குதல், போன்ற தொழில்கள் செய்யவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
🕯️ Vow / offering: ராகுவின் அதிதேவதையாக காளி விளங்குவதால், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி திருமணத்தடை விலக கன்னியர்கள், வாலிபர்கள் வேண்டுகின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்க தொட்டில் கட்டும் வழிபாடு நடக்கிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை வழங்கும் பத்ரகாளி இங்கே தைரிய லட்சுமி அவதாரமாக இருக்கிறாள்.

🎉 Festivals

பங்குனி மாதம் குண்டம் திருவிழா, சித்ராபவுர்ணமி, தீர்த்தக்குட விழா, துர்க்காஷ்டமி (108 சங்கு பூஜை), கார்த்திகை தீபம், நவராத்திரி விழா.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

+91 4256 261 774

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in சதுமுகை or Erode headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Erode to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், ஈரோடு

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.