🛕 Arulmigu Elumeshwaramudayar Temple

அருள்மிகு எழுமேஸ்வரமுடையார் திருக்கோயில், அயக்காரன்புலம் -4 - 614707
🔱 Elumeshwaramudayar

📜 About this temple

பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தினை உண்பதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி எழுந்தது. மகாவிஷ்ணு, மோகினி உருவமெடுத்தார். தேவர்கள் மோகினி உருவில் வந்திருப்பது மகாவிஷ்ணு என உணர்ந்துகொண்டனர். ஆனால் அசுரர்களோ மோகினியின் அழகைக் கண்டு மதி மயங்கினார்கள். இந்நிலையில் ஸ்வர்பானு என்ற அசுரன் மட்டும் சற்று சுதாரித்தபடி தானும் தேவ வடிவத்தை எடுத்து சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று அமிர்தத்தை வாங்கி உண்டான். சூரிய, சந்திரர் அதனைச் சுட்டிக்காட்ட, மகாவிஷ்ணு தன் கையிலிருந்த கரண்டியால் அந்த அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். அசுரன் ஸ்வர்பானுவின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலையானது சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடலானது சீர்காழி அருகே உள்ள செம்பாம்பின்குடி என்ற செம்மங்குடியிலும் விழுந்தது. ஆனால் அந்த அசுரன் தேவாமிர்தத்தை உண்டு விட்டதால் அவனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக உருவெடுத்தது. இந்த இரு பாம்புகளும் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு சிவபெருமானை தியானித்து கடுமையாக தவம்புரியத்தொடங்கின. உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது இரண்டு நாகங்களும் தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரர்களை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் வலிமையையும் வழங்கி அருளுமாறு வேண்டினர். ஆனால் சிவபெருமானோ சிரித்தபடி, சூரிய, சந்திரர்கள் உங்களுக்கு பகைவர்கள்தான். ஆனால் அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே அமரபட்சம்; அமாவாசை, பவுர்ணமி, கிரஹண நாட்களில் நீங்கள் சூரிய, சந்திரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றபடி வரம் அளித்தார். உடனே அதே இடத்தில் அசுரத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ராகுவும், பாம்புத்தலையும், அசுர உடலும் கொண்டு கேதுவும் தோன்றினார்கள். அதன்பின்னர் ராகு நாகேஸ்வரமுடையாரை வழிபட்டு கிரக பதவியை அடைந்தார் என்கிறது இத்தலத்தின் வரலாறு.

சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்வரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).