
Arulmigu Mariamman Thirukoyil
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நஞ்சை இடையர் - 638182
Private Temple
நஞ்சை இடையர்
Namakkal District, Tamil Nadu, India — 638182
📋 Temple Details
⏰ OpensThe temple is opened from 6.00 a.m. to 12.00 a.m. and 4.30 p.m. to 9.00 p.m.
📞 Phone+91- 4287 - 220 411, 99940 71835.
🎉 Festivalஐப்பசியில் 15 நாள் திருவிழா நடக்கிறது.
🙏 Prayer Intentionநோய்கள் நீங்க இங்கு அம்பாளிடம் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். கண்நோய் உள்ளவர்கள் அம்பிகைக்கு கண்மலர் வைத்து வழிபடுகின
🕯️ Vow Ritualஅம்பாளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அக்னி சட்டி எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல அம்மன் நித்யசுமங்கலி என்ற சிறப்பு பெயருடன் சுயம்பு அம்மனாக அருள்பாலி
📜 About this temple
முற்காலத்தில் இப்பகுதி வயலாக இருந்தது. இதில் விவசாயம் செய்து வந்த விவசாயி ஒருவர், வயலில் உழுது கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் ரத்தம் வெளிப்பட்டது. பயந்த விவசாயி, மக்களை அழைத்து வந்தார். அவர்கள் இவ்விடத்தில் தோண்டியபோது சுயம்பு வடிவம் ஒன்று இருந்தது. அப்போது அம்பிகை பக்தர் ஒருவர் மூலம் அசரீரியாக தோன்றி, தனக்கு அவ்விடத்தில் கோயில் கட்டும்படி கூறினாள். அதன்பிறகு மக்கள் சுயம்பு கிடைத்த இடத்திலேயே கோயில் கட்டினர். பிற்காலத்தில் சுயம்புவாக இருந்த அம்பிகைக்கு பின்புறத்தில், மாரியம்மன் உருவச்சிலையையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல அம்மன் நித்யசுமங்கலி என்ற சிறப்பு பெயருடன் சுயம்பு அம்மனாக அருள்பாலிக்கிறார்.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
குழந்தை பிரார்த்தனை: பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களில் விழாக்காலங்களில் மட்டும் அம்பாளுக்கு எதிரே "கம்பம்' நடப்படும். இந்த கம்பத்தை அம்பிகையின், கணவனாக கருதி பூஜை செய்வர். ஆனால், இத்தலத்தில் அனைத்து நாட்களிலும் அம்பாள் எதிரே கம்பம் இருக்கிறது. அம்பிகை, தனது கணவனாக கருதப்படும் கம்பத்தை நேரே பார்த்துக் கொண்டிருப்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே இவளை, "நித்ய சுமங்கலி மாரியம்மன்' என்று அழைக்கிறார்கள். புத்திரப்பேறு இல்லாதவர் இங்கு ஒரு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். ஐப்பசி விழாவின்போது அம்பாளுக்கு எதிரேயுள்ள பழைய கம்பத்தை எடுத்துவிட்டு, புதிய கம்பம் நடுகின்றனர். பழைய கம்பத்தை இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள தீர்த்தக் கிணற்றிற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது கம்பத்திற்கு தயிர் சாத நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கம்பத்தை வணங்கி, எலுமிச்சை தீபமேற்றி, தயிர் சாத பிரசாதம் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள். அம்பாள் சிறப்பு: கொல்லிமலை, அலவாய் மலை, நைனாமலை, போத மலை என்னும் நான்கு மலைகளுக்கு மத்தியில் அமைந்த கோயில் இது. ஐப்பசி விழாவின்போது அம்பிகை சிலை முழுக்க பூ அலங்காரம் செய்கின்றனர். இந்த அலங்காரத்தை "பூச்சாட்டு' என்கிறார்கள். இந்நேரத்தில் அம்ப
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: நோய்கள் நீங்க இங்கு அம்பாளிடம் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். கண்நோய் உள்ளவர்கள் அம்பிகைக்கு கண்மலர் வைத்து வழிபடுகின்றனர்.
🕯️ Vow / offering: அம்பாளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அக்னி சட்டி எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
🎉 Festivals
ஐப்பசியில் 15 நாள் திருவிழா நடக்கிறது.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ The temple is opened from 6.00 a.m. to 12.00 a.m
⏰ 4.30 p.m. to 9.00 p.m
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in நஞ்சை இடையர் or Namakkal headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Namakkal to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஇணை ஆணையர், ஈரோடு
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.