📜 About this temple
இப்பகுதியில் வேட்டையாட வந்த சோழ மன்னன் ஒருவர் தண்ணீர் தாகம் எடுத்து நீருக்கு அலைந்து இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு வரும் போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு ஒன்றை கண்டு அதனை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி கரும்பை ஒடித்த போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அவ்விடத்தை தோண்டிப்பார்த்த போது சிவலிங்கம் இருந்ததாகவும் பின்னர் கோயில் எழுப்பியதாகவும் கர்ணபரம்பரை செய்தி கூறுகின்றது. திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து கீழே விழுந்த அருணகிரி நாதரை காப்பாற்றி முத்தை திரு என்று அடிஎடுத்துக் கொடுத்த முருகப்பெருமான் வயலூருக்கு வா என்று அழைக்க இங்கு வந்து தான் முருகப்பெருமானை அருணகிரியார் பொய்யாகணபதியை வணங்கி கண்டு கொண்டார். அருணகிரி நாதருக்கு தன் வேலால் ஒம் என்ற பிரணவ மந்திரத்தை முருகப் பெருமான் எழுதினார். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ் பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.
முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது. சிவனை முருகன் பூஜித்த தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).