🛕 Arulmigu Jayankondanathaswamy Temple

அருள்மிகு ஜெயங்கொண்டநாதர் திருக்கோயில், மன்னார்குடி - 614001
🔱 Jayankondanathaswamy

📜 About this temple

சம்பகவனம் எனும் மன்னார்குடியில், முற்காலத்தில் ஆயிரத்தெட்டு முனிவர்கள் தவமிருந்தனர். அதில். வஹ்ணிமுகர் முனிவருக்கு கோப்பிரளயர், கோபிலர் என இரு மகன்கள் இருந்தனர். இருவரும் நாராயணனை நோக்கிக் கடும் தவமியற்றினர். தவத்துக்கு இரங்கிய பெருமாள், என்ன வரம் வேண்டும்? எனக் கேட்டார். மோட்சம் வேண்டும் எனக் கேட்டார்கள். துவாரகையிலுள்ள கண்ணபிரானைத் தரிசித்தால் மோட்சம் கிட்டும் என பெருமாள் உபதேசித்தார். இருவரும் துவாரகைக்கு புறப்பட்டனர். செல்லும் வழியில் பல ஸ்தலங்களைத் தரிசித்தனர். ஒரு முறை நாரத முனிவரைக் கண்டு வணங்கி, துவாரகைக்கு எப்படிச் செல்ல வேண்டும், கண்ணன் எங்குள்ளார்? என வினவினர். ஹம்ஸன் போன்ற தீயவரை மாய்த்து, பீஷ்மர் போன்றோரைக் காக்க விண்ணுலகம் சென்றுள்ளார். நீங்கள் துவாரகை, நந்தகோகுலம் தரிசித்துவிட்டு, சம்பகாரண்யம் (மன்னார்குடி) சென்று அங்குள்ள ஹரித்திரா நதிக்கரையில் தவம் இயற்றுங்கள் என நாரதர் பணித்தார். அவ்வாறே ஸ்தலங்கள் பலவற்றைத் தரிசித்து, ஹரித்திரா நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவமிருந்தனர். காட்சியருளிய நாராயணனிடம், அன்று பிருந்தாவனத்தில் செய்த லீலைகளை நாங்கள் கண்டருள வேண்டும் எனக் கேட்டு வரும் பெற்றனர். நாராயணனும், கண்ணனின் 30 திருக்கோலங்களையும் லீலைகளையும் இரு முனிவர்களுக்கும் காட்சியருள மோட்சம் வழங்கினார். தங்களுக்கு அருளிய கோலத்தில் இங்கு தங்கி அனைவருக்கும் காட்சியருள வேண்டுமென அம்முனிவர்கள் வரம் பெற்றனர். அதன்படி, மகாவிஷ்ணு ராஜகோபாலனாக மன்னார்குடியில் வீற்றுள்ளார் என்பது புராணம்.

வியாசலிங்கத்தின் இடப்புறம் நாரதரும், லிங்கத்தின் பின்புறம் மகாவிஷ்ணுவும் வீற்றிருப்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).