🛕 Arulmigu Veerateswarar Temple

அருள்மிகு வீரட்டேஸ்வரர் மற்றும் சோமநாதசுவாமி திருக்கோயில், கொருக்கை - 614713
🔱 Veerateswarar

📜 About this temple

வல்லால மகாராஜன் மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல் அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டி பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தாயார் காத்தார். தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய தேவியார் அந்த மகாராஜன் தலையை வெட்டி விடுகிறார். தேவியாரின் ஆக்ரோஷத்தை போக்க பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்டராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். அதன் பின் இங்கு கோயில் எழுப்பியுள்ளனர். விநாயகருக்கு இந்த செயல் பிடிக்காததால் அவர் அங்கு வரவில்லை என்பதால் அவர் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யவில்லை. அதன் பின் அப்பகுதியினர் கோயில் கட்டி குடமுழுக்கு செய்துள்ளனர். தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பலரும் குல தெய்வமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். அதனால் கோயிலில் பல்வேறு விக்ரகங்களை காணிக்கையாக செய்து வைத்துள்ளனர்.

ஆதி உத்ராண்டையர் உள்ளிட்ட அனைத்து விக்கரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).