🛕 Arulmigu Sadhurvedha Vinayagar Temple

அருள்மிகு சதுர்வேத விநாயகர் மற்றும் மாரியம்மன் திருக்கோயில், நீடாமங்கலம் - 614404
🔱 Sadhurvedha Vinayagar and Mariamman

📜 About this temple

நான்கு வேதங்கள் கற்க விரும்பியவர்கள் இந்த கோயிலில் உள்ள விநாயகரிடம் வேண்டுதல் செய்து பின்னர் படித்த போது வேதங்கள் மனதில் பதிவானதால் கோயில் சதுர வடிவில் இருந்ததாலும் சதுர்வேத விநாயகர் என்று அழைக்கப்பட்டதாகவும், ஔவையார் சங்க தமிழ் வேண்டி, நான்கு வகையான பொருட்கள் வழங்குவதாக பாடல் பாடியதால் இங்குள்ள விநாயகருக்கு சதுர்வேத விநாயகர் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் பழுதடைந்தது. அப்பகுதியினர் கோயிலை புதுப்பித்துள்ளனர். அதன் பின் பல்வேறு வடிவங்களாக வளர்ச்சிபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னாளில் அப்பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மகாமாரியம்மன் விக்கிரகத்தை இக்கோயிலில் வைக்கப்பட்டதால் பலரும் குலதெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்வதால் தற்போது அம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கடந்த 2002 -ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

இந்தக் கோயில் சதுர வடிவில் இருப்பதால் சதுர்வேதி விநாயகர் என பெயர் பெற்றுள்ளது சிறப்புமிக்கதாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).